Sunday, October 31, 2010
Saturday, October 16, 2010
வரவேற்பறை
என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...
வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற அறிமுகமும்
பெருமைகளும்...
இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.
என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...
வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற அறிமுகமும்
பெருமைகளும்...
இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.
Monday, October 11, 2010
அசைவுகள்
அன்பின்
அசைவுகள்...
மென்மையானவை
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும் இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து
நிரப்பிச் செல்லும்.
அன்பின்
அசைவுகள்...
மென்மையானவை
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும் இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து
நிரப்பிச் செல்லும்.
Friday, October 8, 2010
Tuesday, October 5, 2010
இயற்கை
பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம்
செஞ்சூரியன்
முழுநிலவு
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில்
மாலைக்காற்று
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி
காற்றில் அசையும் நாற்று
கலகலக்கும் தென்னை
சலசலக்கும் ஓடை
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.
பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம்
செஞ்சூரியன்
முழுநிலவு
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில்
மாலைக்காற்று
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி
காற்றில் அசையும் நாற்று
கலகலக்கும் தென்னை
சலசலக்கும் ஓடை
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.
Saturday, October 2, 2010
துகிலுரிப்பு
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
Monday, September 27, 2010
பொசுக்கும் கண்கள்...
எனக்குள்
நடுக்கமாய் இறங்குகிறது,
உனது பார்வை...
விழுங்கும் விழிகளில்
அகப்பட்ட மனது
தடதடக்கும்...
உயிர் முழுதும்
கண்களில் தேக்கும்
உனது செய்கை
அதிர வைக்கும்...
உன் பார்வையின்
வீரியத்தை
தாங்க முடியாமல்
திணறுகிறேன்...
என் மென்மையை...
பொசுக்கும்
பார்வையோடு
அலைகிறாய் நீ.
எனக்குள்
நடுக்கமாய் இறங்குகிறது,
உனது பார்வை...
விழுங்கும் விழிகளில்
அகப்பட்ட மனது
தடதடக்கும்...
உயிர் முழுதும்
கண்களில் தேக்கும்
உனது செய்கை
அதிர வைக்கும்...
உன் பார்வையின்
வீரியத்தை
தாங்க முடியாமல்
திணறுகிறேன்...
என் மென்மையை...
பொசுக்கும்
பார்வையோடு
அலைகிறாய் நீ.
Forwarded Message
யாருக்கோ யாரோ
அனுப்பிய மின்தகவல்
கைபேசிகளை கடந்தபின்...
என்னை அடைந்தது.
உனது மனதின்
வெளிப்படாய்...
உள்வாங்கினேன்...
விலாசமின்றி
காற்றில் அலையும்
மின்தகவல்களாய்
அலைகின்றன...
என்னுள் நீ
எழுப்பிய அதிர்வுகள்.
யாருக்கோ யாரோ
அனுப்பிய மின்தகவல்
கைபேசிகளை கடந்தபின்...
என்னை அடைந்தது.
உனது மனதின்
வெளிப்படாய்...
உள்வாங்கினேன்...
விலாசமின்றி
காற்றில் அலையும்
மின்தகவல்களாய்
அலைகின்றன...
என்னுள் நீ
எழுப்பிய அதிர்வுகள்.
Sunday, September 26, 2010
நிறுத்தம் .
உன்னை உற்றுப்பார்க்கிறேன்...
உள்ளுக்குள் பதியவைக்கும்
முயற்சியாய்,
நாளை பயணத்தின்
தொடர்ச்சி இருந்தவரை
இறங்கும் நொடி வரை...
உரையாடி பயணித்து இருக்கிறோம்,
இன்றோ...
ஒவ்வொரு நிறுத்தமும்
பதிவு செய்கிறது
பிரிவின் விளிம்பை...
நிறுத்தத்தில்
இறங்கி நடக்கிறேன்
உன்னை சுமந்தபடி.
உன்னை உற்றுப்பார்க்கிறேன்...
உள்ளுக்குள் பதியவைக்கும்
முயற்சியாய்,
நாளை பயணத்தின்
தொடர்ச்சி இருந்தவரை
இறங்கும் நொடி வரை...
உரையாடி பயணித்து இருக்கிறோம்,
இன்றோ...
ஒவ்வொரு நிறுத்தமும்
பதிவு செய்கிறது
பிரிவின் விளிம்பை...
நிறுத்தத்தில்
இறங்கி நடக்கிறேன்
உன்னை சுமந்தபடி.
Saturday, September 25, 2010
Friday, September 24, 2010
நல்வரவு...
எழுத வேண்டும்...
மனதின் அசைவுகளை
இசைக்கும் விதத்தில்,
உணர்வுகளின்
உயிரோட்டங்களை
எழுப்பும் விதத்தில்,
வீணான வார்த்தைகளை
மௌனத்தில் ஆழ்த்தும் விதத்தில்
ஆசைகளை...
நனவில் நிகழ்த்தும் விதத்தில்
கனவுகளை...
கண்களில் காணும் விதத்தில்
அழுகைகளை...
ஆழமாய் உணரும் விதத்தில்
முரண்பாடுகளை...
முழுமையாய் பகிரும் விதத்தில்
அன்பை...
அரவணைப்பாய் அறியும் விதத்தில்
இலட்சியங்களை...
காலுக்கடியில் அடங்கும் விதத்தில்
நீண்ட பயணத்தில்,
தொடரும் துணையாய்
என்றும் எழுத வேண்டும்.
மனதின் அசைவுகளை
இசைக்கும் விதத்தில்,
உணர்வுகளின்
உயிரோட்டங்களை
எழுப்பும் விதத்தில்,
வீணான வார்த்தைகளை
மௌனத்தில் ஆழ்த்தும் விதத்தில்
ஆசைகளை...
நனவில் நிகழ்த்தும் விதத்தில்
கனவுகளை...
கண்களில் காணும் விதத்தில்
அழுகைகளை...
ஆழமாய் உணரும் விதத்தில்
முரண்பாடுகளை...
முழுமையாய் பகிரும் விதத்தில்
அன்பை...
அரவணைப்பாய் அறியும் விதத்தில்
இலட்சியங்களை...
காலுக்கடியில் அடங்கும் விதத்தில்
நீண்ட பயணத்தில்,
தொடரும் துணையாய்
என்றும் எழுத வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)