Monday, September 27, 2010

பொசுக்கும் கண்கள்...

எனக்குள்
நடுக்கமாய் இறங்குகிறது,
உனது பார்வை...

விழுங்கும் விழிகளில்
அகப்பட்ட மனது
தடதடக்கும்...

உயிர் முழுதும்
கண்களில் தேக்கும்
உனது செய்கை
அதிர வைக்கும்...

உன் பார்வையின்
வீரியத்தை
தாங்க முடியாமல்
திணறுகிறேன்...

என் மென்மையை...
பொசுக்கும்
பார்வையோடு
அலைகிறாய் நீ.

1 comment: