Saturday, September 3, 2011

காத்திருப்பு

சிறுபிள்ளையின்
இதயத்தோடு நேசிக்கிறேன்
சுயமிலாத சிந்தனையோடு...
கண்ணாடியில் பிரதிபலிக்கும்
பிம்பமாய்....
புன்னகையில் பரவுகிறது...
பூக்களின் மணம்,
கண்களில் கசிகிறது...
நேசத்தின் ஈரம்,
பாசத்தோடு கூடும்...
கைகள் நான்கும்,
விரல்கள் அசைக்கும்
பிரிவின் விடையும்
இழுக்கும் உன்னருகில்...
காலங்கள் உருண்டோடினாலும்
கள்ளமில்லா... உணர்வுகளுடன்
காத்திருக்கிறேன்....
உன் வரவுக்காக,
வாசற்படியில் குத்துக்காலிட்டு  
முகம் தாங்கிய கைகளுடன்...
உன் வரவில் குவிந்திருக்கும்
விழிகளுடன்.

Wednesday, August 3, 2011

தவிர்ப்பு

உன்னை தவிர்த்து செல்கிறேன்...
நேசத்தின் கரங்களை விலக்கி செல்கிறேன்,
கள்ளமிலாத மனசென்றாலும்,
கடந்து வந்த பாதைகளில்...
புண்பட்ட பாதங்கள்...
நெருஞ்சி முற்களாய்
துளைக்கும் நிதர்சனங்களில்,
என்னை காப்பாற்றும்
கவசமாய்....
உடுத்தி கொள்கிறேன்...
உள்நுழையாத போர்வை ஒன்றை.

Thursday, February 3, 2011

ஆக்டோபஸ்

ஆக்டோபஸின்
கைகளால்...
உடலெங்கும்
நகர்கிறாய்...
உள்ளுக்குள்
சிதையாமலிருக்கும்...
என்னைப் பார்த்து...
நடுங்கியபடி.

Sunday, January 30, 2011

தொடர்பு...

மௌனத்தின்  மொழியில்
பேசிய காலங்களில்...
அழுத்தமாய் புரிதல்,
அலைவரிசையில் ஒன்றியிருந்தது.



ஒலிகளோடு தொடர்புகொண்டேன்...
முரண்பட்ட வார்த்தைகளும்
முடிவுபெறா விளக்கங்களும்
மனப்போராட்டங்களாய்
நீள்கின்றன...

உள்வாங்காத வார்த்தைகள்,
எழுத்துகளாய் விலகி
ஒலிகளாய் சப்தமிடுகின்றன...
கோபங்களும் ஆற்றாமையும்
ஏக்கங்களும்...
ஊடகங்களாகின்றன.

கண்களின் வழியாக
கசிந்து உருகி நீளும்...
அன்பின்இழை,
புலப்படாமலேயே...
அறுந்து போகிறது!