Sunday, October 31, 2010
Saturday, October 16, 2010
வரவேற்பறை
என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...
வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற அறிமுகமும்
பெருமைகளும்...
இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.
என் சிறுவயது
புகைப்படம்
வரவேற்கும் வரவேற்பறையில்,
சிறு குழந்தையாய்
கூடை நாற்காலியில்
சுருண்ட முடியுடன்
பொக்கைவாய் சிரிப்புடன்...
வீடுகள் மாறின
அப்பாவின் பணியிட மாறுதலுடன்
வரும் விருந்தினர்களை
வரவேற்கும்
புகைப்படம்,
மூத்தமகளென்ற அறிமுகமும்
பெருமைகளும்...
இன்று...
வரவேற்கின்றன...
சகோதரர்களின் படங்களும்
பெருமைகளும்,
வரவேற்பறை மட்டுமல்ல
வீடு முழுவதும் தேடுகிறேன்...
எனது இருப்பை
தொலைத்திருந்தது
பிறந்த வீடு.
Monday, October 11, 2010
அசைவுகள்
அன்பின்
அசைவுகள்...
மென்மையானவை
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும் இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து
நிரப்பிச் செல்லும்.
அன்பின்
அசைவுகள்...
மென்மையானவை
கண்களில்
கலங்கும் கண்ணீரைப் போல
கைகளை
வருடும் நேசத்தைப் போல
தூரத்தில்
கசியும் இசையைப் போல
காற்றில்
அசையும் இலையைப் போல
உருவமில்லா
அருவமாய் உள்நுழையும்
உயிரை அணைத்து
நிரப்பிச் செல்லும்.
Friday, October 8, 2010
Tuesday, October 5, 2010
இயற்கை
பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம்
செஞ்சூரியன்
முழுநிலவு
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில்
மாலைக்காற்று
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி
காற்றில் அசையும் நாற்று
கலகலக்கும் தென்னை
சலசலக்கும் ஓடை
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.
பனித்துளி
கடல்வெளி
அலைநுரை
கரைதொடும்அலைகள்
அகண்ட வானம்
செஞ்சூரியன்
முழுநிலவு
சிலீரிடும் தென்றல்
மலைமுகடு
பஞ்சுப்பொதியாய் மேகம்
இளவேனில்
மாலைக்காற்று
மழைமேகம்
பசும்போர்வையாய் புல்வெளி
காற்றில் அசையும் நாற்று
கலகலக்கும் தென்னை
சலசலக்கும் ஓடை
குளிரும் மார்கழி
அதிகாலை
பறவைகளின் மொழி
...
உனது அன்பு.
Saturday, October 2, 2010
துகிலுரிப்பு
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
Subscribe to:
Posts (Atom)