Sunday, October 31, 2010

காலைச்  செய்தி

எனது வாசிப்பு...
வரிகளில் தொடங்கி,
வார்த்தைகளில் புதைந்து
உறைந்து கிடந்த உண்மையைத் தேடி
அதனுள் பின்னப்பட்ட சதிகளை விடுத்து
உள்ளே, உள்ளே சென்று
ஊடுருவியப் பின்,
மீண்டும் வாசிக்கிறேன்
மேலோட்டமாக...
செய்தி மறைகிறது 
பல செய்திகளை மறைத்தபடி 
படபடக்கிறது 
செய்திதாள் !

No comments:

Post a Comment