Monday, September 27, 2010

பொசுக்கும் கண்கள்...

எனக்குள்
நடுக்கமாய் இறங்குகிறது,
உனது பார்வை...

விழுங்கும் விழிகளில்
அகப்பட்ட மனது
தடதடக்கும்...

உயிர் முழுதும்
கண்களில் தேக்கும்
உனது செய்கை
அதிர வைக்கும்...

உன் பார்வையின்
வீரியத்தை
தாங்க முடியாமல்
திணறுகிறேன்...

என் மென்மையை...
பொசுக்கும்
பார்வையோடு
அலைகிறாய் நீ.
Forwarded Message

யாருக்கோ யாரோ
அனுப்பிய மின்தகவல்
கைபேசிகளை கடந்தபின்...
 என்னை அடைந்தது.

உனது மனதின் 
வெளிப்படாய்...
உள்வாங்கினேன்...

விலாசமின்றி
காற்றில் அலையும்
மின்தகவல்களாய்
அலைகின்றன...
என்னுள் நீ
எழுப்பிய அதிர்வுகள்.

Sunday, September 26, 2010

நிறுத்தம் .

உன்னை உற்றுப்பார்க்கிறேன்...
உள்ளுக்குள் பதியவைக்கும்
முயற்சியாய்,
நாளை பயணத்தின்
தொடர்ச்சி இருந்தவரை
இறங்கும் நொடி வரை...
உரையாடி பயணித்து இருக்கிறோம்,

இன்றோ...
ஒவ்வொரு  நிறுத்தமும்
பதிவு செய்கிறது
பிரிவின் விளிம்பை...
நிறுத்தத்தில்
இறங்கி நடக்கிறேன்
உன்னை சுமந்தபடி.    

Saturday, September 25, 2010

முகமூடி

எதற்காக
பிரயத்தனப்படுகிறாய் ?
முகமூடிகளை
அணிந்துகொண்டு
வெளிப்படும்போதேல்லாம்..
சொல்லிவிட
நினைப்பதுண்டு,
இயல்பாய் எதிர்கொள்வதைவிட
ஆயிரம் மடங்கு
வெளிப்பாடுகள் தெறிக்கின்றன
முகமெங்கும்...
தயவுசெய்து
முகமூடியை  களைந்துவிடு.     
     

Friday, September 24, 2010

வண்ணத்துப்பூச்சி

காட்டுச் செடிகளின்
பூக்களின் மீது உட்கார்ந்து
போக்கு காட்டுகிறது...
பிடிக்கும் விழைவில்
ஒவ்வொரு செடியாய்
செலுத்தப்படுகிறேன்...
அழகிய இறக்கைகளை 
படபடத்தப்படி 
தொடர்கிறது உனது பயணம்...
மொத்த அன்பையும் 
சுமந்து கொண்டு 
பின்னால் அலைகிறது 
மனது.
  

நல்வரவு...

எழுத வேண்டும்...
மனதின் அசைவுகளை
இசைக்கும் விதத்தில்,
உணர்வுகளின்
உயிரோட்டங்களை
எழுப்பும் விதத்தில்,
வீணான வார்த்தைகளை
மௌனத்தில் ஆழ்த்தும் விதத்தில்
ஆசைகளை...
நனவில் நிகழ்த்தும் விதத்தில்
கனவுகளை...
கண்களில் காணும் விதத்தில்
அழுகைகளை...
ஆழமாய் உணரும் விதத்தில்
முரண்பாடுகளை...
முழுமையாய் பகிரும் விதத்தில்
அன்பை...
அரவணைப்பாய் அறியும் விதத்தில்
இலட்சியங்களை...
காலுக்கடியில் அடங்கும் விதத்தில்
நீண்ட பயணத்தில்,
தொடரும் துணையாய்
என்றும் எழுத வேண்டும்.