Sunday, September 26, 2010

நிறுத்தம் .

உன்னை உற்றுப்பார்க்கிறேன்...
உள்ளுக்குள் பதியவைக்கும்
முயற்சியாய்,
நாளை பயணத்தின்
தொடர்ச்சி இருந்தவரை
இறங்கும் நொடி வரை...
உரையாடி பயணித்து இருக்கிறோம்,

இன்றோ...
ஒவ்வொரு  நிறுத்தமும்
பதிவு செய்கிறது
பிரிவின் விளிம்பை...
நிறுத்தத்தில்
இறங்கி நடக்கிறேன்
உன்னை சுமந்தபடி.    

1 comment: