Friday, September 24, 2010

நல்வரவு...

எழுத வேண்டும்...
மனதின் அசைவுகளை
இசைக்கும் விதத்தில்,
உணர்வுகளின்
உயிரோட்டங்களை
எழுப்பும் விதத்தில்,
வீணான வார்த்தைகளை
மௌனத்தில் ஆழ்த்தும் விதத்தில்
ஆசைகளை...
நனவில் நிகழ்த்தும் விதத்தில்
கனவுகளை...
கண்களில் காணும் விதத்தில்
அழுகைகளை...
ஆழமாய் உணரும் விதத்தில்
முரண்பாடுகளை...
முழுமையாய் பகிரும் விதத்தில்
அன்பை...
அரவணைப்பாய் அறியும் விதத்தில்
இலட்சியங்களை...
காலுக்கடியில் அடங்கும் விதத்தில்
நீண்ட பயணத்தில்,
தொடரும் துணையாய்
என்றும் எழுத வேண்டும்.

No comments:

Post a Comment