Thursday, March 29, 2012

பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத,இயல்பான எந்த நட்பும், எந்த காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும், இந்த உலகும் மேலும் அழகுறும்.

- வண்ணதாசன்.


சமீபத்தில் வண்ணதாசனின் "உயரப்பறத்தல்" சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன். உணர்வுகளை உயிரோட்டத்தோடு கதையில் உலவவிட்டிருக்கும் அழகு... மனசை கரைத்து... ஒவ்வொரு கதையிலும்... நம்மைக்  கண்டுகொள்ள முடிந்ததது... ஒரு இனிய அனுபவம். மொத்தத்தில் எனக்குள் என்னை புதுப்பித்து. உணர்வுகளில் எந்த கசப்பும் இல்லாமல்... கதை மாந்தர்கள் மட்டுமல்ல, அவரின் சிறுகதைகள் பயணிக்கும் தளமும் அதில் வாழும் உயிரற்ற உடமைகளும்... உணர்வுகளோடு உயிர்ப்போடு உலவுகையில் தோன்றியது... அடடா இத்தனை  அழகான உலகத்தில், இத்தனை அழகான மனிதர்களுடன்... நான் வாழும் வாழ்க்கை எத்தனை சுகமானது என்று.

உயர பறக்கும் அனுபவத்தை.... முக நூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

Tuesday, March 13, 2012





என்ன கிடைத்தது?

சுற்றியடித்த சூறாவளியால்
வேரறுந்து.
வீழ்ந்தப்பின்..
படிமமாக சித்தமானேன்,
பாறையாய்... இறுகி
சலனமின்றி
சாய்ந்திருந்த வேளையில்...
சத்தமின்றி
உள்நுழைந்தாய்,
விரிசல்களாய் உடைகின்றன,
இறுகிய என் சுவர்கள்,
சிதைந்து நொறுங்கியது..
என் சமாதி,
உயிரற்ற உடைமையை,
அசைத்து உடைத்து போட்டதில்
என்ன கிடைத்தது உனக்கு?