Tuesday, March 13, 2012





என்ன கிடைத்தது?

சுற்றியடித்த சூறாவளியால்
வேரறுந்து.
வீழ்ந்தப்பின்..
படிமமாக சித்தமானேன்,
பாறையாய்... இறுகி
சலனமின்றி
சாய்ந்திருந்த வேளையில்...
சத்தமின்றி
உள்நுழைந்தாய்,
விரிசல்களாய் உடைகின்றன,
இறுகிய என் சுவர்கள்,
சிதைந்து நொறுங்கியது..
என் சமாதி,
உயிரற்ற உடைமையை,
அசைத்து உடைத்து போட்டதில்
என்ன கிடைத்தது உனக்கு?


No comments:

Post a Comment