Friday, December 19, 2014

கண்ணிமைக்கும் நேரத்தில்...















நினைவுகளாய் நீண்டிருந்தவரை...
உணர்வுகளில் படர்ந்து
மெல்ல நகரும்
காலத்துடன்
அசைபோட்டபடி...
எழுத்துகளாய் உருக்கொண்டு 
கவிதையாய்
கொட்டிகொண்டிருந்தாய்.

அருகில் வந்த நிமிடத்திலிருந்து...  
மேலெழுந்து
பொங்கும் உணர்வுகளுடன்
நெஞ்சு முட்டும் மகிழ்ச்சியுடன்
கரைபுரளும் நிகழ்வுகளாய்
அழகான நொடிகள்...
அசுர வேகத்தில்
பறந்து செல்கின்றன
உன்னுடனான பொழுதுகள்...

நினைவுக் கூட்டில்
சேர்க்கவும் வழின்றி
கடந்து போயின
கண்ணிமைக்கும் நேரத்தில் !