Monday, June 30, 2014
Sunday, June 29, 2014
இரட்டை நாயனம்
உருவம் மட்டுமே
உன்னுடையாதாக,
அன்னியனாய் தெரிகிறாய்
அத்தனைப் பிரயத்தனப்பட்டும்,
உன்னைப் பார்க்க இயலவில்லை.
வெளிப்பாடுகளில்...
அன்பை பொழிகிறாய்,
யதார்த்தமாக இருப்பதாக
காட்டிக் கொள்கிறாய்,...
உனது மொழியை
உன் முத்திரையோடு
உரையாட எத்தனிக்கிறாய்...
இரட்டை நாயனமாய்
சிக்கித் தவிக்கிறது....
இயல்பறுந்த நீயும்
நீயின்றி இருக்குமுன் நிலையும்.
உன்னுடையாதாக,
அன்னியனாய் தெரிகிறாய்
அத்தனைப் பிரயத்தனப்பட்டும்,
உன்னைப் பார்க்க இயலவில்லை.
வெளிப்பாடுகளில்...
அன்பை பொழிகிறாய்,
யதார்த்தமாக இருப்பதாக
காட்டிக் கொள்கிறாய்,...
உனது மொழியை
உன் முத்திரையோடு
உரையாட எத்தனிக்கிறாய்...
இரட்டை நாயனமாய்
சிக்கித் தவிக்கிறது....
இயல்பறுந்த நீயும்
நீயின்றி இருக்குமுன் நிலையும்.
Saturday, June 28, 2014
ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு
போலிருந்தது...
அன்பின்றி உணர்ச்சியற்ற
தொடுதலை உணர்ந்த
தருணமது.
உனது மனதைப்போல
வன்முறையாய்
இயந்திரமாய் நகர்கிறாய்...
இருண்ட வாழ்கையின்
வலி உள்ளிறங்கியது
உணர்வுகள் மரித்தன.
வெளியில் நிகழும்
எதுவும் உள்நுழையவில்லை
நழுவினேன்...
அணுவளவும் தொடர்பற்றவளாய்
அழகான புல்வெளி விரிந்திருந்தது...
அமைதியான மனவெளியில்,
பஞ்சுப்பொதியாய்
மேகங்கள் தாங்கி நின்றன.
வானவில் விரியும்...
வான்வெளியில் பறந்து
செல்கிறேன்...
ஆக்கிரமிப்பிலிருந்து
விடுபட்டவளாய்.
சிலீரென்று தொடுகிறாய்...
உயிரற்ற உடலை தொடுவது போலிருந்தது...
அன்பின்றி உணர்ச்சியற்ற
தொடுதலை உணர்ந்த
தருணமது.
உனது மனதைப்போல
வன்முறையாய்
இயந்திரமாய் நகர்கிறாய்...
இருண்ட வாழ்கையின்
வலி உள்ளிறங்கியது
உணர்வுகள் மரித்தன.
வெளியில் நிகழும்
எதுவும் உள்நுழையவில்லை
நழுவினேன்...
அணுவளவும் தொடர்பற்றவளாய்
அழகான புல்வெளி விரிந்திருந்தது...
அமைதியான மனவெளியில்,
பஞ்சுப்பொதியாய்
மேகங்கள் தாங்கி நின்றன.
வானவில் விரியும்...
வான்வெளியில் பறந்து
செல்கிறேன்...
ஆக்கிரமிப்பிலிருந்து
விடுபட்டவளாய்.
Friday, June 27, 2014
பூக்கள்
பூக்கள் வசீகரிப்பதுபோல்
பயணங்களில் தென்படும்
குழந்தைகளின் இருப்பு.
கைகள் தானாக
நீள்கின்றன...
ஏந்திக் கொள்ள
உலகம் அறியா
அவர்களது உலகத்துள்...
மனம் குழைகிறது.
கைகாட்டி விடைப்பெறுகிறது
குழந்தை
கிளர்ந்தெழுகிறது...
அப்பிஞ்சுக் கைகளை
பிடித்துக் கொண்டு
செல்லவேண்டுமென்ற ஆசை.
பூக்கள் வசீகரிப்பதுபோல்
பயணங்களில் தென்படும்
குழந்தைகளின் இருப்பு.
கைகள் தானாக
நீள்கின்றன...
ஏந்திக் கொள்ள
உலகம் அறியா
அவர்களது உலகத்துள்...
மனம் குழைகிறது.
கைகாட்டி விடைப்பெறுகிறது
குழந்தை
கிளர்ந்தெழுகிறது...
அப்பிஞ்சுக் கைகளை
பிடித்துக் கொண்டு
செல்லவேண்டுமென்ற ஆசை.
Subscribe to:
Posts (Atom)