Saturday, June 28, 2014

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

சிலீரென்று  தொடுகிறாய்...
உயிரற்ற உடலை தொடுவது
போலிருந்தது...
அன்பின்றி உணர்ச்சியற்ற
தொடுதலை உணர்ந்த
தருணமது.

உனது மனதைப்போல
வன்முறையாய்
இயந்திரமாய் நகர்கிறாய்...
இருண்ட வாழ்கையின்
வலி உள்ளிறங்கியது
உணர்வுகள் மரித்தன.

வெளியில் நிகழும்
எதுவும் உள்நுழையவில்லை
நழுவினேன்...
அணுவளவும் தொடர்பற்றவளாய்

அழகான புல்வெளி விரிந்திருந்தது...
அமைதியான மனவெளியில்,
பஞ்சுப்பொதியாய்
மேகங்கள் தாங்கி நின்றன.

வானவில் விரியும்... 
வான்வெளியில் பறந்து
செல்கிறேன்...
ஆக்கிரமிப்பிலிருந்து
விடுபட்டவளாய்.


No comments:

Post a Comment