Friday, June 27, 2014

பூக்ள்

பூக்கள் வசீகரிப்பதுபோல்
பயணங்களில் தென்படும்
குழந்தைகளின் இருப்பு.

கைகள் தானாக
நீள்கின்றன...
ஏந்திக் கொள்ள
உலகம் அறியா
அவர்களது உலகத்துள்...
மனம் குழைகிறது.

கைகாட்டி விடைப்பெறுகிறது
குழந்தை
கிளர்ந்தெழுகிறது...
அப்பிஞ்சுக்  கைகளை
பிடித்துக் கொண்டு
செல்லவேண்டுமென்ற ஆசை.

No comments:

Post a Comment