Sunday, June 29, 2014

இரட்டை நாயனம்

உருவம் மட்டுமே
உன்னுடையாதாக,
அன்னியனாய் தெரிகிறாய்
அத்தனைப் பிரயத்தனப்பட்டும்,
உன்னைப் பார்க்க இயலவில்லை.

வெளிப்பாடுகளில்...
அன்பை பொழிகிறாய்,
யதார்த்தமாக இருப்பதாக
காட்டிக் கொள்கிறாய்,...
உனது மொழியை
உன் முத்திரையோடு
உரையாட எத்தனிக்கிறாய்...

இரட்டை நாயனமாய்
சிக்கித் தவிக்கிறது....
இயல்பறுந்த நீயும்
நீயின்றி இருக்குமுன் நிலையும்.

No comments:

Post a Comment