Saturday, September 3, 2011

காத்திருப்பு

சிறுபிள்ளையின்
இதயத்தோடு நேசிக்கிறேன்
சுயமிலாத சிந்தனையோடு...
கண்ணாடியில் பிரதிபலிக்கும்
பிம்பமாய்....
புன்னகையில் பரவுகிறது...
பூக்களின் மணம்,
கண்களில் கசிகிறது...
நேசத்தின் ஈரம்,
பாசத்தோடு கூடும்...
கைகள் நான்கும்,
விரல்கள் அசைக்கும்
பிரிவின் விடையும்
இழுக்கும் உன்னருகில்...
காலங்கள் உருண்டோடினாலும்
கள்ளமில்லா... உணர்வுகளுடன்
காத்திருக்கிறேன்....
உன் வரவுக்காக,
வாசற்படியில் குத்துக்காலிட்டு  
முகம் தாங்கிய கைகளுடன்...
உன் வரவில் குவிந்திருக்கும்
விழிகளுடன்.