Sunday, January 30, 2011

தொடர்பு...

மௌனத்தின்  மொழியில்
பேசிய காலங்களில்...
அழுத்தமாய் புரிதல்,
அலைவரிசையில் ஒன்றியிருந்தது.



ஒலிகளோடு தொடர்புகொண்டேன்...
முரண்பட்ட வார்த்தைகளும்
முடிவுபெறா விளக்கங்களும்
மனப்போராட்டங்களாய்
நீள்கின்றன...

உள்வாங்காத வார்த்தைகள்,
எழுத்துகளாய் விலகி
ஒலிகளாய் சப்தமிடுகின்றன...
கோபங்களும் ஆற்றாமையும்
ஏக்கங்களும்...
ஊடகங்களாகின்றன.

கண்களின் வழியாக
கசிந்து உருகி நீளும்...
அன்பின்இழை,
புலப்படாமலேயே...
அறுந்து போகிறது!