Sunday, April 15, 2012

1932 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட "இனப் பிரதிநிதித்துவம் " பூனா ஒப்பந்தந்தில் பறிபோனதில் தாழ்த்தப்பட்டவர்கள் இழந்தது என்ன?

- communal award ( இனப் பிரதிநிதித்துவம் )  என்றால் என்ன ?

பொது தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமையோடு தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி உரிமையையும் பெற்றனர். அதாவது ஒரு மாகாணத்தில் (  மாநிலத்தில் ) சில தொகுதிகளில் ( சட்டசபை மற்றும் மக்களவை) தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களோடு , அத்தொகுதிகளில் தழ்த்தப்படோருக்காக தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினரையும் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இரட்டை வாக்குரிமையே தாழ்த்தப்பட்டோருக்கு அள்ளிக்கப்பட சிறப்புரிமை ஆகும்.

இந்த இரட்டை வாக்குரிமை பற்றி அம்பேத்கர் கூறியது -

" இனப் பிரதிநிதித்துவத் தீர்வினால் அளிக்கப்பட்ட இரண்டாவது வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றதொரு சலுகை. ஒரு அரசியல் ஆயுதம் என்கிற முறையில் பார்க்கும்போது அதன் மதிப்பு கணிப்பிற்கு அப்பாற்ப்பட்டது "

இதை ஏன் இந்து மகாசபையும் சாதிய இந்துக்களும் எதிர்த்தனர்?
இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இனப்பிரதிநிதுத்துவதை இந்து மகாசபையும் சாதிய இந்துக்களும் மகாத்மா காந்திஅடிகளும் எதிர்த்தனர்.
மகாத்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து , "பூனா  ஒப்பந்தத்தை" நிற்பபந்தித்து , தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையும், அம்பேத்காரையும் நேர்மையற்ற முறையில் இனப்பிரதி நிதித்துவத்தை கைவிட செய்தார். அதற்கு பதிலாக தனித்தொகுதிகள் எண்ணிக்கை மிகைபடுத்தப்பட்டன.
ஆனால் 1937  இல் நடைபெற்ற தேர்தலில் தாழ்த்தப்படவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 151  இடங்களில் , 78  இடங்களை காங்கிரசு கைப்பற்றியது.
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, காங்கரஸ் திட்டங்களை ஏற்றுக்கொள்வதாக உறுதி கொடுத்த வேட்பாளர்களை... கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதுதவம் எதுவும் இல்லாமல்  (தனித்தியங்கும் சக்தியை பறித்துக்கொண்டு) தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பிரதிநிதிகள் தேர்வாயினர்.

இன்றும் தனிதொகுதியின் பிரதிநிதிகள், தேசிய அல்லது மாநில கட்சிகளின் கைப்பாவையாக, அவர்களது தொகுதியில் நடக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளுக்கேதிராக எதுவும் செய்யமுடியாமல் கட்சியரசியலில் கரைந்து போனதற்கு, காரணம் உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அவர்களது பங்களிப்பினை அளிக்கும் உரிமையான "இனப்பிரதிநிதுத்துவதை" இழந்ததே காரணம். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமையை தட்டிப்பரித்ததில் காந்தியின் பங்கு அதிகம்.