துகிலுரிப்பு
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
மிருகங்கள் சூழ்ந்திருந்தன,
கண்களில்...
காலம் காலமாய்
ஏற்றிய போதையுடன்
உதடுகளில்
அருவருப்பான கேலியுடன்
இரையை உறுமலுடன்...
அவள் ஆடையை உருவி
கண்களால் ருசித்தன...
திரண்ட அவளழகை
கழிகள் பதம் பார்த்தன
அவளது கதறல்...
காதுகளை கிழித்தது
கண்ணன் சேலைத் தரவில்லை
துகிலுரிப்பவர்கள்...
தர்மராஜாக்கள் என்பதால்
கதறுவது...
சேரிப் பெண்கள் என்பதால்.
vazhzkkam ennra peyarill nadakkum avallam............ur presentation is excellant.
ReplyDeletemostly women below poverty line are facing these
ReplyDeleteproblem in India and in Eelam . the poem remind
the case of Padmini in Prison . And the struggle
we, the women are facing