Wednesday, May 9, 2012

ஏன் இந்த தற்கொலைகள் ..........?  

சமீபத்தில் அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த 2 தொடர்ச்சியான தற்கொலைகள் ஒரு அடித்தட்டு முன்றாம் வருடம் பயின்ற
மாணவனும், ஒரு முதல் வருட மாணவியும்.... ஒரே மாதத்தில் 2 தற்கொலைகள் , இரண்டிற்கும் காரணம் கிராமத்திலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து
நன்றாக படித்து 90 சதவீதத்துக்கும்
அதிகமான மதிப்பெண்கள் பெற்று  அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு பெற்றவர்கள்.
தற்கொலை... அதுவும் பள்ளிவாழ்கையில் மிக அதிகமான மதிப்பெண் எடுத்து 
உயர் கல்வி பயில தகுதி அடிப்படையில் உள்நுழையும் கீழ்தட்டு
மாணவர்களின் தற்கொலைகள் தொடருவது... அதிகமாக prestigious institutions
like IITs, NITs,IISCS....நடந்துகொண்டே இருக்கின்றன . நிர்வாகங்களும் அம்மாணவர்களால் அந்த உயர்கல்விநிறுவனங்களின்
தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மாணவர்கள்   தற்கொலை  செய்து கொள்வதாகவும் அவர்களுக்கு    தனிவகுப்புகள்  நடத்த நடவடிக்கை  எடுக்கப்போவதாகவும் சொல்லி  அந்த கதைகளுக்கு  முற்றுப்புள்ளி  வைத்துவிடுகின்றனர். தற்கொலைகள்  தொடர்ந்த வண்ணமே உள்ளன.

உண்மையில் இம்மாணவர்கள் தமிழ்வழி கல்வி பயின்று, பின் ஆங்கில வழி கல்வி முறைக்கு ஈடு தர முடியவில்லையா? அல்லது... இக்கல்வி நிறுவனங்களின் தரத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலாமல், கோழையாக இந்த முடிவுக்கு செல்கிறார்களா 
என்பது ஆய்வு செய்யவேண்டிய ஒன்று.

இன்னொரு  முக்கிய கோணமும் இதற்கு உண்டு , அது   தாழ்த்தப்பட்ட,  பழங்குடி மாணவர்கள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட 
மாணவர்கள் இந்த உயர்கல்விகூடங்களில் அனுபவிக்கும் தீண்டாமை 
கொடுமைகள்.

அந்த இரும்பு திரை விளக்கினால் அதில் எரிக்கப்பட்ட மாணவர்களின் 
கனவுகள்,  தீண்டாமையின் கோரப்பிடியில் சிதைந்தது தெரியும். நான் சொல்வது அனுமானத்தின் அடிப்படையில் இல்லை.  உயர்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும்,
பிராமண சமூகத்தை சேர்ந்த சென்னை  IIT யின் கணித பேராசிரியையே , தனது மாணவர்களுக்காக ( தாழ்த்தப்பட்ட சாதி) முனைவர்  பட்டத்திற்கான தேர்வில் நடக்கும் இந்த தீண்டாமையின் கோரத்தை  எதிர்த்து போராடினார் , கடைசியில் வேறு வழி இன்றி  நாளிதழ்கள் மூலம் இக்கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.தனது மாணவர்கள் அறிவில் தகுதியானவர்களாக
இருந்தும் MADRAS IIT அவர்களுக்கு சாதியின் காரணமாக தேர்வு செய்யாமல் அவர்களுக்கு முனைவர் பட்டம் தர காலம் கடத்துவதும், தேர்வு செய்ய மறுப்பதும் குறித்து தைரியமாக வெளியில் பேசினார். இது அவர்  பிராமண சாதி  என்பதால் வேறுவழியின்றி அவருக்கு அதில் சாதீய நோக்கம் ஏதும் இல்லை
என்பதால் இந்த  உண்மை  பட்டவர்த்தனமாய் தெரிய வந்தது. ஏனெனில் பெரும்பாலும் இட ஒதுக்கீட்டின்  அடிப்படையில் செல்லும் மாணவர்களுக்கு MERIT இல்லை என்ற பாட்டை பாடி அவர்களது தகுதியை, திறமையை மூட இந்த
இடஒதுகீடிற்கு எதிரான கும்பலுக்கு எளிதாக இருக்கும்.

இன்னொரு அனுபவம் .... எனது கல்லூரியில் நடந்ததது. என் சக வருட மாணவ நண்பன் பைத்தியமாக வெளியில் தள்ளப்பட்ட கொடுமை இன்னும் மாறாத ரணமாய் இருக்கிறது 
மனசுக்குள். கணணி பொறியியலில் பெரிய கண்டுபிடிப்புகள் அவனால் நடந்திருக்கலாம் , ஆனால் உயர்சாதி வகுப்பின் 
ஆதிக்கத்தில் இருந்த நிர்வாகம்  மற்றும்  ஆசிரியர்கள்  அம்மாணவனது சுயமரியாதையை  சீண்டி, கடைசியில் பொறியியலில் அவன் வாங்கும் மதிப்பெண்களும் அவனது அசாத்திய திறமைகளையும்
மதிப்பிடப்படாமல்,ஆங்கிலம் பேச வரவில்லை என்ற கேலிக்கு, வகுப்பிலும் 
ஆளாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவனது நம்பிக்கையை சீர்குலைத்து, கடைசியில் முதல் வருட ஆங்கில பாடத்தில் தேர்வு பெறவில்லை என 
காரணம் காட்டி மற்ற பாடங்களில் முதன்மையில் இருந்த மாணவனை YEAR BACK SYSTEM என்ற அஸ்திவாரம் கொண்டு வீழ்த்தி, அவனது கிராமத்து பெற்றோர்கள் கண்ணீர் வழிய அவனை பைத்தியமாக
அவர்களது  கிராமத்திற்கு அழைத்து சென்றது கொடுமையாக இருந்தது. அந்த மாணவன் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில்
சேர்ந்த மாணவன். அவனது அறிவு மற்றும் திறனை பார்த்த எங்களது கல்லூரியின்  LAN Coordinator அவனை எல்லா lab ளையும் எல்லா systems operate பண்ண அனுமதித்திருந்தார.
ஆனால் academic staffs அவனது சாதி , அவனது ஏழை பின்னணி , தமிழ் வழி கல்வி  ஆகியவற்றை மட்டுமே குறையாக  பார்த்து...திறமையான மாணவனின் மனசை காயப்படுத்தி கொலைசெய்தனர் 
என்றே சொல்வேன்.
இவர்களது இளகிய மனசு, போராட்டத்தை எதிர் கொள்ள முடியாமல் இப்படி 
தற்கொலை செய்வது சரியான வழி இல்லை என்றாலும்....  ஆளுமை இல்லாமல் வாழ்கையின் அடித்தளத்தில் இருந்து முன்னேற 
நினைக்கும் அவர்களது  கனவுகளை  சிதைக்கும் நவீன துரோனாச்சார்யர்களான இந்த அமைப்பிற்கு, 
யார் தண்டனை தருவது?

  


No comments:

Post a Comment